துவாதச புண்டரம் : [ஶ்ரீசூர்ணம் (தாயார்) - திருமண் (பெருமாள்) - ஸ்தாநம் - நிறம்] கேசவன் தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் ! நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் -- வேள்வித்தீ பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் ! அன்னை சிரிதேவி யாம்! நாரணன் சங்கு தங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர் மங்கலத் தாளினன்! தேவியும் -- பொங்கலைவாய் தோன்றினாள்! வா ன்நீல வண்ண த்தெம் அண்ணல்மால் ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு ! மாதவன் கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில் பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் -- பொருந்தும் அமலன்அங் கைமா தவன்தன் தேவி கமலை யும் சேரிடம் மார்பு ! கோவிந்தன் குளிர்முத்தின் வெண்ணிற மும் கோலவில் நான்கும் மிளி ர்முன் கழுத்தின் அமர்ந்து -- அளிபொறை அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் ! முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து. விஷ்ணு தாமரைத் தாதன்ன பொன்னிற த் தோள்கள் சுமக்கும் கலப்பை ஓர் நான்கும் -- நமக்கு வயிற்றின் வலப்புர ம்சேர் விட்டுவவன் மாது துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து. மதுசூதனன் உலக்க
Respond to this post by replying above this line New post on Thiruvonum's Weblog ஸ்ரீ பன்னிரு நாமம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்- by thiruvonum ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி - கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம - சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான் பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வான் ஏறப் போம் அளவும் வாழ்வு ---------------------------------------------------------------------------------- இந்த திவ்ய பிரபந்தமும் பேர் அருளாளன் விஷயமே -ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களை சொல்லி பன்னிரு திருமண் காப்புகளில் அவ்வவ் வெம்பெருமான்களை ஆவாஹனம் செய்ய வேண்டும் -இந்த பிரபந்தத்தில் அவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம் - அவர்கள் அணிந்து இருக்கும் திவ்ய ஆயுதங்கள் -அவர்கள் தலைவராய் வீற்று இருக்கும் திசை - நம் சரீரத்தில் புண்ட்ர ரூபமாய் அவர்கள் வகிக்கும் பாகம் ஆகியவற்றை ஸ்ரீ தேசிகன் வெளியிட்டு அருளுகிறார் - ---