Skip to main content

Posts

Showing posts from July, 2017

ஆசுகவி - பகுதி 4.

முகநூல் மலர்ந்த ஆசுகவி - பகுதி 4. 451 . ஸ்ரீ பார்த்த சாரதி பிரம்மோத்ஸவம் : பிரமன் விடுதூய  தர்மாதி பீடம்  புறப்பாடு காலை முதல்நாள் -- இரவு  குழலூதும் கண்ணனுக்கு  புன்னை வாகனம்  தாழாதே காணலாம் மேவு. பரம பதநாதன் பாங்காய்த்  தோன்றி  சிரம மதுஇன்றி யாரும் -- வரமெனக்  கண்டு களிப்ப  அனந்தன்பால்  வந்தவன்காண்  மீண்டரி வாகனம்  தோன்று. புதுவருடம் ''பொற்றடை'' அஃதின்  தடைதீர்  யதுகுல பாலன்  கலுழன்  -- அதன்மேல்  போந்தான் விடியல்; இரவிலோ  அன்ன த்தை  சொந்தமாய் ஊர்ந்தான் உவந்து. வங்கத் தலைகடல் வாவென் அழைப்ப,வான்  தங்கத் தகடன்ன பாலொளி -- எங்கும்  பரப்பும் சிறப்புடை  சூரிய சந்திரர்   சேர வலம்வரும்நாள் நாலு. இறைவியின் ஏற்றம் தமதாக பார்த்தற்  கிறையவன்  அன்னை  அவளின் -- நிறைபொறை  நாண்உருவில் தோற்றலும் மாணுரு  மாருதி  திண்தடந்தோள் ஆற்றுவான் தொண்டு. ஆனந்த நல்விமானம்  பற்றி பசுமஞ்சள்  புனித...