முகநூல் மலர்ந்த ஆசுகவி - பகுதி 4.
451. ஸ்ரீ பார்த்த சாரதி பிரம்மோத்ஸவம் :
பிரமன் விடுதூய தர்மாதி பீடம்
புறப்பாடு காலை முதல்நாள் -- இரவு
குழலூதும் கண்ணனுக்கு புன்னை வாகனம்
தாழாதே காணலாம் மேவு.
பரம பதநாதன் பாங்காய்த் தோன்றி
சிரம மதுஇன்றி யாரும் -- வரமெனக்
கண்டு களிப்ப அனந்தன்பால் வந்தவன்காண்
மீண்டரி வாகனம் தோன்று.
புதுவருடம் ''பொற்றடை'' அஃதின் தடைதீர்
யதுகுல பாலன் கலுழன் -- அதன்மேல்
போந்தான் விடியல்; இரவிலோ அன்னத்தை
சொந்தமாய் ஊர்ந்தான் உவந்து.
வங்கத் தலைகடல் வாவென் அழைப்ப,வான்
தங்கத் தகடன்ன பாலொளி -- எங்கும்
பரப்பும் சிறப்புடை சூரிய சந்திரர்
சேர வலம்வரும்நாள் நாலு.
இறைவியின் ஏற்றம் தமதாக பார்த்தற்
கிறையவன் அன்னை அவளின் -- நிறைபொறை
நாண்உருவில் தோற்றலும் மாணுரு மாருதி
திண்தடந்தோள் ஆற்றுவான் தொண்டு.
ஆனந்த நல்விமானம் பற்றி பசுமஞ்சள்
புனிதமோ டாடி பவனிகாண் -- ஆனந்த
சந்தோகா அன்பன்மால் பின்னும் இந்திரேசன்
தந்தவானை மேல்ஏசல் ஏற்பு.
ஆடிவரும் தேரில் அழகன் எமையேதான்
நாடிவரக் காணே ! அதுவும்தான் -- வாடியே
செய்புலன் மேலே ஒருபாட்டம் தாழாதே
பெய்மழை போலேயாம் மால்.
ஆயர்தம் பாடி கவர்ந்துண்ணும் கண்ணன்கை
தூயநல் வெண்ணைபோல் என்னைஏல் -- மாயன்
ஆடுமோர் பல்லக்கு மேவினன் மற்றவனே
ஆடல்மா வல்லான் பெரிது.
கணையாழி காணாது கோயில் புகுதலும்
மாணினி அன்னை கதவடைத்து -- ஆணைவழி
கூடா திடைமறிப்ப தேடல் முனைவான்மால்
ஆடும்நல் பல்லக் கமர்ந்து.
எட்டுநன் நாளும் கடந்த கடைநாள்
இட்டமான தன்தேவி மார்சூழ -- பட்டிமேய்ந்த
பார்த்தன்தன் சாரதிக்கு நீராட்டு உற்சவம்
நேர்த்தியாய் காணல் களிப்பு.
461. பர தத்வ நிர்ணய வைபவம் :
கண்ட பொழுது தனக்கொன்றும் கேளாது
தொண்டாய தன்நிலைபோய் ஆண்டாளை -- பெண்கொடுத்த
ஓதாவில் பல்லாண்டு ஓதி பெரியாழ்வார்
ஆதஅன் நாளைக்கொண் டாடு.
ஓதாவில் பல்லாண்டு ஓதி பெரியாழ்வார்
ஆதஅன் நாளைக்கொண் டாடு.
வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் :
விண்தொடும் வேங்கட ஏழு மலையானே!
தண்தடந் தாழ்வரை மேலுகள் -- தொண்டர்
திரளாய் தினம்தொழக் கண்டிட நின்றாய்!
வரம்தரு வேள்வி மடுத்து.
தண்தடந் தாழ்வரை மேலுகள் -- தொண்டர்
திரளாய் தினம்தொழக் கண்டிட நின்றாய்!
வரம்தரு வேள்வி மடுத்து.
வேத வல்லி :
என்அன்னை! என்அம்மை! என்தெய்வம்! என்னென்னே
உன்னைநான் உள்மகிழ்ந்துச் சொன்னேன்போல் -- நன்று
எனைநீ உன்சிறுவன்! உன்பிள்ளை! என்ப
தனைதாயே! யாண்டும் நினை!
உன்னைநான் உள்மகிழ்ந்துச் சொன்னேன்போல் -- நன்று
எனைநீ உன்சிறுவன்! உன்பிள்ளை! என்ப
தனைதாயே! யாண்டும் நினை!
குணகிருத தாஸ்யம் Vs ஸ்வரூப கிருத தாஸ்யம்.
இணங்காரை தம்கரம் கொண்டு தினமே
வணங்குதல்செய் தேவாதி தேவா! -- குணம்கண்டு
தோற்றார் தமைபின் அவர்கள் இயல்பதாய்
மாற்றும் உமைப்பெறல்என் நோற்று?
வணங்குதல்செய் தேவாதி தேவா! -- குணம்கண்டு
தோற்றார் தமைபின் அவர்கள் இயல்பதாய்
மாற்றும் உமைப்பெறல்என் நோற்று?
சேரா சேர்த்தி சிங்கப்பிரான் :
இங்கில்லை என்றெள் ளினான்ஒல்லை வீயவே
கல்லில்கண் தோன்றினான்! அத்தோடு -- நல்ல
வசுரன் பிரக்லாதன் பாலித் தருள்செய்
அசலில் அரிமுகன் கோலு.
கல்லில்கண் தோன்றினான்! அத்தோடு -- நல்ல
வசுரன் பிரக்லாதன் பாலித் தருள்செய்
அசலில் அரிமுகன் கோலு.
பெரியனைப் பரவுவதே பெறாப்பேறு :
தன்னை நினையாது இன்றுதமைத் தந்தமால்
தன்னை நினைவாய் மனமேநீ! -- என்று
தெளிந்தினிது பின்னை எமக்குமன் ஞான
மளித்த மாறன் பரவு.
தன்னை நினைவாய் மனமேநீ! -- என்று
தெளிந்தினிது பின்னை எமக்குமன் ஞான
மளித்த மாறன் பரவு.
பகவத் ப்ரீதிகரம் புண்யம், கோபஜனகம் பாபம். :
மெய்வருத்தி மாலைத் தொழவேண்டா! அஃதன்றி
உய்வகை உந்தமக்கு யானுரைக்கில் -- ஐய!நீர்
திருவல்லிக் கேணியாள் ஐவரவர் ஆன்ற
திருவுள்ளம் கோணா தொழுகு .
உய்வகை உந்தமக்கு யானுரைக்கில் -- ஐய!நீர்
திருவல்லிக் கேணியாள் ஐவரவர் ஆன்ற
திருவுள்ளம் கோணா தொழுகு .
திராவிடநல் தமிழ் பின்போன பெருமாள் :
வேதம் பொழுதும் முறைஓதி வாழ்வார்பொற்
பாதம் தொழஅவர் பின்நாளும் -- போத
பெருமான் திருவல்லிக் கேணியம்மான் தொண்டும்
தருவனாம் சேம உயிற்கு.
பெருமான் திருவல்லிக் கேணியம்மான் தொண்டும்
தருவனாம் சேம உயிற்கு.
வேதப்பர மதிகம் நமன்யே அந்யாம் :
பொதுநின்ற வேதம் தமிழ்வந்த காரணம்
ஓதில் முதல்யார்? இதுவது -- யாது?
எனபௌத்தர் முண்டர் சமணர் பலர்தேட
ஞானத் துளதிருமால் காட்டு.
எனபௌத்தர் முண்டர் சமணர் பலர்தேட
ஞானத் துளதிருமால் காட்டு.
உப்புச்சாற்றின் உயர் சாறு :
மறைசாற்றின் நாயகன் தேவி! உனையே
இறைப்போதும் யான்மறவேன்! தேவர் -- முறைமுறை
பாற்கடல் ஊர அமுதன் அமுதென
நேர்பட்ட நீயே அமுது!
பாற்கடல் ஊர அமுதன் அமுதென
நேர்பட்ட நீயே அமுது!
471. ஆளவந்தார் கொடை.
ஆக்கியாழ்வான் தாழ்ப்ப விடைமடுத்த நாக்கும்,அன்
நாக்கில் உமிழ்ஊர கீரைக்காய் -- மிக்கசொல்
கீதை உரைகேட்ட காதும், எதிராசர்
போதமாள வந்தார் கொடை.
கீதை உரைகேட்ட காதும், எதிராசர்
போதமாள வந்தார் கொடை.
காமத் காமம் முச்யதே :
வரப்புயர் தாமரை போல்தடங்கண் மாதர்
தரமோஎன் மாதவனார் வீடு? -- கறவா
மடநாகு கன்றுக் கிரங்கல்போல் ஏகற்
கிடமாம் இறைதாள் நமக்கு.
தரமோஎன் மாதவனார் வீடு? -- கறவா
மடநாகு கன்றுக் கிரங்கல்போல் ஏகற்
கிடமாம் இறைதாள் நமக்கு.
சாரநாதன் :
வேதத்தின் உச்சி! அதனின் மிகுசாறு !
ஆதிமூல மானதேவ தேவன்!என் -- நாதன்!
சின்முத்ரா தத்வஞான போதன்!என் றிப்பஞ்ச
தன்மைசேர் பல்சுவையின் கூட்டு.
ஆதிமூல மானதேவ தேவன்!என் -- நாதன்!
சின்முத்ரா தத்வஞான போதன்!என் றிப்பஞ்ச
தன்மைசேர் பல்சுவையின் கூட்டு.
திருமணத்தூண் :
அரங்கன் திருக்கண் தரங்கம் அடித்துக்
கிரங்க விடாதே மணத்தூண் -- இரண்டன்
சுவர்பற்றி அவ்வரங்கர் ஆன்ற அருள்தான்
எவர்பெற்றார் நாடுவரோ மற்று?
கிரங்க விடாதே மணத்தூண் -- இரண்டன்
சுவர்பற்றி அவ்வரங்கர் ஆன்ற அருள்தான்
எவர்பெற்றார் நாடுவரோ மற்று?
பிராஹ்மண்யம் விலைசெல்வது ஆசாரத்தே :
அந்தண ராவது மெய்யறிவு தேடலால்!
எந்தண்மைக் குமவர்கட் ஈடிலார் -- இந்த
பண்பதை இகழலார்? ஏனையோர் வாழவே
செந்தண்மை பூண்டொழுக லால்!
எந்தண்மைக் குமவர்கட் ஈடிலார் -- இந்த
பண்பதை இகழலார்? ஏனையோர் வாழவே
செந்தண்மை பூண்டொழுக லால்!
சிந்தயந்தி
குழலூதும் கண்ணா! உனைக்காண வேண்டி
எழலுற்று வாயில் கடப்ப -- வழியின்றித்
தாழமனம் தாளாது சிந்தயந்தி நின்னடைந்த
ஏழை மனம்எனக்குத் தா!
ஆறு வார்த்தை பெருக்கர் :
அவரோ இவர்என் மணப்பாக்க நம்பி
எவர்தேடி நாடுவார்? ஆங்கு -- அவரும்ஆம்!
என்று உரைத்த உலகா ரியன்தானே
நன்று நமக்கிறைஎன் கூறு.
என்று உரைத்த உலகா ரியன்தானே
நன்று நமக்கிறைஎன் கூறு.
இந்திரியாணி ஹயான் யாஹுஹு :
புலனைந்தும் தந்தாம் உணவு தேடி
அலையாதே உள்மனதை புத்தி -- நிலையாய்
நடத்தி உடல்மேவு ஆன்மாவின் நல்வழி
ஓட உருளட்டும் தேர்.
நடத்தி உடல்மேவு ஆன்மாவின் நல்வழி
ஓட உருளட்டும் தேர்.
கிளையுடை தென்னை :
திருமங்கை மன்னன் திருப்பணி அஃதுள்
ஒருபங்கு உண்டு அவர்தோழர் -- ஈரிருவர்க்
கென்பேன்! திருமங்கை மன்னன் திருவரசு
கென்பேன்! திருமங்கை மன்னன் திருவரசு
தென்னை கிளைநாலும் கண்டு.
வரைக்கொம்பு மேலானை :
மறைஉச்சி மேலானை! வேங்கட மாமலை
வரைக்கொம்பு மாலவனை! நம்மின்-- குறையனைத்தும்
நீறுசெய் வண்கை நெடுமாலை! யான்காணு
மாறுசெய் கருத்துளே னே!
வரைக்கொம்பு மாலவனை! நம்மின்-- குறையனைத்தும்
நீறுசெய் வண்கை நெடுமாலை! யான்காணு
மாறுசெய் கருத்துளே னே!
481. நாம மகிமை :
காட்டை அனல்எரித் தாலும் அவைமீள
நாட்டல் உலகியற்கை; அஃதாநம் -- மாட்டு
மறுதலைக்கும் தீவினைகள் மாய கழிவிரக்கம்
சேரவோதும் கேசவன்தன் பேர்.
நாட்டல் உலகியற்கை; அஃதாநம் -- மாட்டு
மறுதலைக்கும் தீவினைகள் மாய கழிவிரக்கம்
சேரவோதும் கேசவன்தன் பேர்.
யத் யத் ஆசாரதி . . .ஸ்ரேஷ்டா :
அந்தண்யத் துக்காணி வேர்சந்த்யா வந்தனம்!
எந்தண்மைக் கும்அஃ தொழுகலான்! -- முந்தயர்
வேதம் கிளையதாய் செய்கிரியை தண்தளிராய்
ஓதக்கால் வீழா மரம்.
எந்தண்மைக் கும்அஃ தொழுகலான்! -- முந்தயர்
வேதம் கிளையதாய் செய்கிரியை தண்தளிராய்
ஓதக்கால் வீழா மரம்.
அந்யபரத்தை ஆத்ம விநாசம் :
குடல்தொடுக்கு புத்தி தகுதி உடலம்
கொடுத்துயிர் காப்பான் பெருமை -- மடதியென
மாயன் மணந்ததன் பின்பு பிரன்நினை
வாயபயன் பேற்றில் துளை
கொடுத்துயிர் காப்பான் பெருமை -- மடதியென
மாயன் மணந்ததன் பின்பு பிரன்நினை
வாயபயன் பேற்றில் துளை
திருகு பணம் :
தன்வினை தன்னைச் சுடும்!முற் பகல்செயின்
குன்னாது பிற்பகல் நானேயோ -- சொன்னேன்?நம்
அன்னையர் தொன்றுதொட்டு சொல்பவை தான்னன்றோ?
துன்னத் துயரம் தரும்.
குன்னாது பிற்பகல் நானேயோ -- சொன்னேன்?நம்
அன்னையர் தொன்றுதொட்டு சொல்பவை தான்னன்றோ?
துன்னத் துயரம் தரும்.
எடுப்பார் கைப்பிள்ளை :
சீரார் மறைபாற் கடலைக் கடைந்ததனில்
மோரதனை நீக்கி நனிவெண்ணை -- யாரார்
எடுப்பார் அவரே அடைந்தார்அக் கண்ணன் !
எடுப்பார்கைப் பிள்ளை அவன்.
எடுப்பார் அவரே அடைந்தார்அக் கண்ணன் !
எடுப்பார்கைப் பிள்ளை அவன்.
மாற்றமும் மாறாமையும் :
கலக்கிய மாமனத்தள் கைகேயி மாற
இலக்கியம் ராமகாதை ஓங்கும் -- மலங்கிய
பார்த்தன் மனம்மாறா தோர்ததால் கீதையாம்
வார்த்தைப் பயன்சேர் நமக்கு.
பார்த்தன் மனம்மாறா தோர்ததால் கீதையாம்
வார்த்தைப் பயன்சேர் நமக்கு.
அன்ய சேஷத்வம் விலக்கு :
தருமம் பலவும் இருக்க நமக்கெது சேரும் எனத்தேறி அஃதொன்றே -- நேரும்
அதுபோல் பதிஎனமால் கைக்கொள வேட்டோம்
மதிவிகற் பால்தெய்வம் மற்று.
பெரிய திருவடி :
புள்ளுக் கிறைவா! புனிதவைன தேயா!எம்
உள்ளத் துறைமாலின் எண்ணம்போல் -- துள்ளித்
திடர்கெடத் தோன்றுவான் நீபிறந்தாய்!
உள்ளுவமுன் வேத உரு!
மதுரா மதராக்ஷரம் :
கீதை யுரைஉபாயம் நாலுளும் நம்தமக்கு
யாதும் அறிந்தாற்ற வேண்டாவே! -- பாதம்
எதிராசர் நாமம் இராமா நுசன்தன்
மதுரமொழி நாலும் அலற்று.
ஆத்ம சமர்ப்பணம் :
தன்னதல் லாததை யான்உன்ன தாக்கினேன்!
அன்னதான என்செய்கை யும்கண்ண! -- சொன்னால்
அரசுக்காம் முத்திரை ஆக்கிய ஒன்றை
அரசிடம் சேர்த்த படி.
491. பிராட்டி புருஷகாரமானால் அல்லது கார்யம் செய்யான் :
தன்சீலை தாள்மறைப்ப தாயே!உன் பொற்பாதம்
என்பிடிப்பேன்? உன்நாதன் தன்பாதம் -- முன்காட்டி
நிற்ப அவனடிக்காய் யான்ஆளாம் முன்னமே
எற்பால் கடைக்கண்நீ காட்டு.
வாமன ஜெயந்தி :
சிறுகுறளாய் மாவடிவில் மண்ணளந்த மாயன்
பிறப்பன் குடையோடு குண்டலிகை -- வேறா
உருவில் வியன்மார்பில் முப்புரிநூல் மேன்விளங்கு
சீரான் கழலே சரண்.
பவித்ரோத்சவத்தில் பெரிய பெருமாள் பூச்சாண்டி சேவை :
பால்பரந்த மேன்வெளியில் நட்சத் திரகூட்டம்
போலநம் மாலரங்கர் மேல்பதிந்த -- வானுலக
கோலம்தான் காணில் அயனம் அவைக்கவன்என்
றேலும் மொழிமெய்ப்பித்து.
மிதுன சேஷத்வம் :
மந்திரம் மந்திர சேடம் இரண்டும்போல்
எந்தை பிரான்தன தேவியும் -- அந்தமாய்
சேர்த்தியில் நீடுமிச் சேவைகாண் என்மனம்
நேர்த்தியாய் நாடும் அடிக்கு.
கைமுதல் இன்மை :
வேதநூல் ஓதி மதிபடைத் தேனுமல்லேன்!
தாதநின் பாதம் கதியென்று -- ஈதுநாள்
நின்னடைந் தேனுமல்லேன்! நாகை அழகியானே!
இன்னடைந்தேன் என்னையுனக் காக்கு.
பொதுநின்ற பொன்னங் கழல் :
மாலுக்கே மாலாய் போன மதியுடையார்
நாலிகை நாளும் நவிலும்வாய் -- போலும்
எனக்கவர வேண்டா! அரன்முரன் வாணன்
எனஅவர்வாய் ஏற்றல் பொது.
வைஷம்ய நைர்கிருண்யம் :
ஏற்ற இறக்கம் சிறுமைமேன் மையவை
ஆற்றும் அவரவர்நல் தீவினையான் -- ஏற்றும்
இறையோ பிழைப்பு?தம் இச்சை வழிசெல்
நிறையில் உயிரின் குறை.
பவித்ரோத்சவம் :
புனிதநூல் ஆடி புதுக்கணிப்பும் பூப்பொலிவும்
தான்ஐயன் தூய்மைத்தோ? மங்கலம் -- ஆனவன்தன்
மங்கலம் ஓமவேள்வி தோற்றுவார்க்கு எற்றுக்கோ?
செங்கமலத்தாள் நின்ஆகத்தாய் சொல்லு!
அக்நி(க்குப்) பரீக்ஷை :
இரணியன் பாலனை தீயினில் பெய்ய
விரவுதீ சுட்டதில்லை! பத்தினியை -- சேராது
தீகுளிக்க ஏவ அவளைத்தீ சுட்டதில்என்?
தான்குளித்துக் காண்கச்சிக் கோன்!
தீகுளிக்க ஏவ அவளைத்தீ சுட்டதில்என்?
தான்குளித்துக் காண்கச்சிக் கோன்!
500. நமோநமோ வாங் மனசாதி பூமயே : உண்ணக் கனிகள் தருவாள் ஒருத்திபின்
தின்னப் பழங்கள் தருவளாம் -- இன்னொருத்தி.
தன்னுலகம் தாஎன் றவட்குமேன் ஈந்தவக்
கண்ணனையார் எண்ணப் பெறும்?
ரக்ஷிக்கும்போது பிராட்டி சந்நிதி வேண்டும் :
செய்வினை யோபெரிது! செய்தவை இன்னமும்
எய்திலவாய் என்கூடு பூரித்து -- எய்தனன்!
ஐய! அதுகண்டு இருவராய் நின்றீரோ?
தெய்வநாய கன்தேவி யோடு!
போனகம் தருவரேல் புனிதமன்றே :
வாக்கும், செயலும், நினைவதும் மாலுக்கே
ஆக்கும் அடியார் எவராமவர் -- நோக்கொடு
சீர்த்தாள் விளக்கநீர் ஆக்கமும் போனகம்வாய்
சேர்பப் புனித முயிர்க்கு.
துலா மூலம் :
மாமுநியே இன்னமொரு நூற்றாண் டிரும்என்ற
சேமநல் கூற்று தினமுமே -- நாமுரைக்க
ஆமது நாள்ஒன்றாய் நீட்டிக்கும் நல்குறவு
பூமாதும் மாலும் கனிந்து
அஷ்டாதச விதானம் :.
மாமுனிவன் பொன்னடிகள் எண்மரவர் வெண்குடையாய்
கோமானின் தோள்தழீஇ மாவல்லி -- மாமதில்
வீதி வலம்வரும் அவ்வனந்தன் தாமிவரும்
ஏதுண்டு சங்கை அதுக்கு?
வாய்க் கொண்டு பாடவல்ல கவியல்லேன் யான் :
துலாமூலம் தோன்றிய வள்ளர்க் கிணையே
இலாஞான தேசிகனை நாளும் -- குலாவிநங்கள்
ஏத்தினும் ஏத்தகில்லா வான்பெருமை மாமுனியை!
தோத்திரம் என்செய்வேன் யான்?
சேனை முதலியார் :
சேனா பதியாழ்வான் தேனாம் திருப்பாதம்
வானோர் பதிஉறை வார்க்கும்மற் -- றேனையோர்
தந்தமக்கும் ஆமே முதல்கதிநம் சடகோபர்
தந்ததிரு வாய்மொழிய துண்டு.
லோகாச்சார்யார் பிள்ளை :
அவரோநீர்? என்றசொல் கேட்டலும் ஆவதென்?
தேவரீர் நம்மை இரண்டாற்றின் நடுவேயாய்
மேவல் பணித்தீர் எனமணப் பாக்கத்து
தேவர் உரைப்பத் தெளிந்து.
யா வித்யா ஸா விமுக்தயே :
துறைகள் பலபல உண்டாம் அவையுள்
நெறியலா தற்றுஎன் போக்கும்? -- அறிவு
அரிய வழிபோகல் நீத்து எளிதாம்
உரிய செயல்கற்கை அஃது.
முதலாழ்வார் :
மாமயிலை அல்லிக் குளமாலை சொல்மாலை
தேமதுர ஞானத் தமிழ்கொண்டு -- நாமும்நன்
கேற்றபொய்கை பூதம்பேய் அன்னெரித்த நல்விளக்கில்
தோற்ற திருமாலைக் காண்டு.
510. விஷயாந்தர பிராவண்யம் :
விட்டிஇல் பூச்சி விளக்கில் விரும்பிவீழும்,
தேட்ட வலையுளாட் பட்டு,நம் -- மாட்டுள
ஐம்புலன் காட்டும்அம் மாயச் சுழிபட்டார்
வம்புலாம்ஈட் டத்தராய்க் கெட்டு.
உத்தவ கீதை :
அறுகால பொன்வண்டு ஆசான் நமக்கு;
விரைமலர் தேடியே தேனுண்ணும் -- மாறு
ஞானமது தேடி குருமார் பலர்பணிந்து
வானுலகு காண்பார் அவர்க்கு.
ஜங்கம தேவன் :
உள்ளம் ஒருகோயில் கண்கோ புரவாசல்
வெள்ளவாரி வாவிமுன் வாயதா --வள்ளல்
பிரானார்க்கு பூஉண்டு நீர்உண்டு கண்ணன்பால்
தீராக்கா தல்தலைக் கொண்டு.
ஒடக் கையரும், விட்டத்தில் இருப்பாரும் :
அந்தணர் ஆகை அனைவர்க்கு மாம்விதியே! முத்தீயோ
டந்தணல் ஓம்பலின் முன்படைத்த -- அந்தணன்
தாள்சேரக் கூம்புவார் முன்நிருத்தி மற்றையார்
ஆள்அவர்க் கென்னல் முறை.
ஒட்டா விளவின் கனி :
இராமநுசன் அண்டினார்க்கு இல்லை எனாது
பரமபதம் தான்தருவ னேலும் -- முறையில்
கனிந்துள்ளே ஒட்டறநின் றோடு கழல்விளமாய்
ஆனபின் அன்றோஆம் வீடு.
புறத்ததோடு அகத்ததாகில் அழகு:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடில் - வழக்கதை
மெய்ப்பித்த கூரேசர் நீட்டியும் கூட்டியும்
செய்தாரே முக்குறும்பு மாய்த்து.
நட்பு:
உதவிக்கை மாறு கரணன்கொள் நட்பு;
பதவிபெறு மாறு சுயோதனன் -- தீதுடை
நட்புமே! ஏழை குசேலன் உளங் கொளுயர்
நட்புபிழை யாது(மில்)நீ ஆற்று.
Composed by Dasarathy Dasan,
(Agaram) Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan.
Comments
Post a Comment