துவாதச புண்டரம் : [ஶ்ரீசூர்ணம் (தாயார்) - திருமண் (பெருமாள்) - ஸ்தாநம் - நிறம்] கேசவன் தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் ! நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் -- வேள்வித்தீ பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் ! அன்னை சிரிதேவி யாம்! நாரணன் சங்கு தங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர் மங்கலத் தாளினன்! தேவியும் -- பொங்கலைவாய் தோன்றினாள்! வா ன்நீல வண்ண த்தெம் அண்ணல்மால் ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு ! மாதவன் கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில் பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் -- பொருந்தும் அமலன்அங் கைமா தவன்தன் தேவி கமலை யும் சேரிடம் மார்பு ! கோவிந்தன் குளிர்முத்தின் வெண்ணிற மும் கோலவில் நான்கும் மிளி ர்முன் கழுத்தின் அமர்ந்து -- அளிபொறை அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் ! முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து. விஷ்ணு தாமரைத் தாதன்ன பொன்னிற த் தோள்கள் சுமக்கும் கலப்பை ஓர் ந...